Search This Blog

Sunday 25 October 2009

அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல...ஒரு கண்ணி...!!!!


















காரிகையின் காதலை நம்பி,
காத்திருந்தேன் கன காலம்!
காணாமல் போய் விட்டாள் - என்
காதலை பொய்யாக்கி விட்டு....

காலம் செய்த கோலம் என்று,
பொய்யுரைக்க மாட்டேன்...!
காதலி செய்த நாடகம் என்று,
மெய்யுரைக்கவும் மாட்டேன்...!

மாறாக........

என்னோடு வாழ அவளுக்கு..,
அதிஷ்டம் இல்லை என்பேன்..!

என் புன்னகையின் அழகை,
ரசிக்க தெரியாதவள் என்பேன்..!

என் கவிதைகள் அவள் மேல் கொண்ட,
எண்ணற்ற காதலை புரிந்து கொள்ளாதவள் என்பேன்..!

என் ஆண்மையின் மென்மையினை..,
உணர முடியாதவள் என்பேன்..!

என் குழந்தை உள்ளத்தை...,
அறிந்து கொள்ளத்தெரியாதவள் என்பேன்..!

கண்ணீர் வடிக்கும் என் இதயத்தை...கூட,
கண்டு கொள்ள முடியாத குருடி என்பேன்..!

அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல...
என்னை தாக்க வந்த....
கண்ணி என்பேன் கண்ணி என்பேன்..!!!

" அரசி "

No comments:

Post a Comment